22/04/2012

ஆரிய,திராவிட இனவாதம்



நமது நாட்டில் பிரிவினையைத் தூண்டி அரசியல் செய்து ஆட்சியில் அமர்வதும்,பின் நெறிகெட்ட வகையில் சொத்து சேர்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது.அந்த வகையில் ஐரோப்பியரால் தொடங்கப்பட்டு சுயநலவாதிகளால் இன்றும் பரப்பப்பட்டு வருவது ஆரிய,திராவிட இனவாதம்.
பொய்களாலும்,திரித்தல்களாலும் புனையப்பட்ட இந்த பிரிவினைக் கோட்பாட்டின் முரண்பாடுகளைக் காணலாம்
அவை

1.   ஆரியர்கள் வெண்நிற தோலும்,திராவிடர்கள் கருப்புநிற தோலும் உடையவர்கள்
2.   இராமாயணம்,மஹாபாரதம் போன்றவை ஆரியர்கள் திராவிடர்களைத் துன்புறுத்திய வரலாறு
3.   ஆரியர்கள்,இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள்

ஆனால்,ஆரியர்களின் காப்பியங்களில் ஒன்று எனப்படும் மஹாபாரதத்தின் நாயகன் கிருஷ்ணன், கருப்புதோலுடைய யாதவகுலத்தைச் சேர்ந்தவன்.

மற்றொரு ஆரியனான அயோத்தி ராமனின் நிறமும் கருப்பு

தமிழர்களின் (திராவிடர்களின்) தனி கடவுள் முருகனோ சிகப்புநிறம், நாம் நல்ல வெள்ளை நிறமுடையோரை “நல்ல சிகப்பு” என்றுதானே அழைக்கிறோம். அப்பன் முருகபெருமானும் ஆரிய இனமோ?

நாத்திகர்களுக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை,அவர்களுக்கு, குழப்பத்தை ஏற்படுத்த ஏதாவது வேண்டுமென்றால் கடவுள், புராணம், அதில் உள்ள கடவுளின் நிறம் எல்லாம் உண்மை, மக்கள் நல்லவர்களாக வாழ ஆன்மிகத்தை நாடினால் கடவுள் பொய், புராணம் கட்டுக்கதை.

மாற்றுக்கட்சியில் செல்வாக்கான நபர் பிராமணராக இருந்தால் அவர் ஆரியன், ஆகாதவன், இராவணகாவியம் பாடவேண்டும் என்றால் பிராமணரான இராவணன் திராவிடனாக மாறுகிறார், இது எப்படி என்று புரியவில்லை.

இந்திய வேதங்களையும், பாரசிக “அவெஸ்தா” வையும் தவிர உலகில் வேறெந்த பழைமையான மொழியிலும் “ஆரிய” அல்லது “ஆரியன்” எனும் வார்த்தை இல்லை. அவற்றிலும்கூட அவ்வார்த்தை எந்த ஒரு இனத்தையோ, குலத்தையோ, ஜாதியையோ குறிப்பிடவில்லை. மாறாக அது அரசர்,குரு அல்லது கடவுளை உயர்த்திச்சொல்லப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

19ஆம் நூற்றாண்டுவாக்கில், மாக்ஸ்முல்லரின் ஆரியப்படையெடுப்புக் கோட்பாட்டின் தாக்கத்தால் இவ்வார்த்தைக்கு புது அர்த்தம் கிடைத்தது. ஆரியர்கள் ஐரோப்பாவிலிருந்து வந்தனர் எனும் இந்தப் புரளியின் நோக்கம் வெள்ளையர்களுக்கு பொய்யானதொரு பெருமித உணர்வைத்தருவதும் பிறரது சுயமரியாதையைக் குலைப்பதுமாகும்.

ஒரு தேசத்தை அழிப்பதற்கு முதல்படி அதன் வரலாற்றை, பெருமையை அம்மக்களின் நினைவுகளிலிருது அழிப்பது, பின் அதன் இலக்கியம்,கலை,பண்பாடு அகியவற்றை அழித்து யாரோ ஒருவரைக் கொண்டு புதிய வரலாறு படைப்பது, (இன்றைய தமிழ் எழுத்துமுறை ஒரு கிருத்துவ பாதிரியாரால் புதுப்பிக்கப்பட்டது-விளைவு, நமது முன்னோர்களை நம்மால் படிக்கமுடியவில்லை அதற்கு ஒரு நிபுணர் வேண்டும்),அவர்களது முன்னோர்களுடன் அவர்களுக்குள்ள தொடர்பைத் துண்டிப்பது.

ஆரிய,திராவிட இனவாதம் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. “ஆரிய” என்றால் உயர்ந்த என்பது மட்டுமே பொருள்.


“நமது வேதங்களிலோ, புராணங்களிலோ ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தனர் என்பதற்கு ஆதாரமாக ஒரு வர்த்தைகூட இல்லை.”
இது சுவாமி விவேகானந்தரின் கூற்று

“தமிழ்” எனும் பிராகிருத வார்த்தை “திராவிட” என சமஸ்கிருதமொழியில் சொல்லப்பட்டுள்ளது

ஆகவே ஆரியன் திரவிடன் என்பது இருவேறு இனங்களல்ல, ஒரே இனம்தான்.

No comments:

Post a Comment