22/04/2012

நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலக்கல்வி



நம் நாடு ஆன்மீகத்தில் சிறந்தது என்று கூற கேட்டிருக்கின்றோம்… ஆன்மிகம் என்றால் கோவிலுக்கு செல்வது… விரதம் இருப்பது… நல்ல பக்திப்பாடல்கள் கேட்பது என்ற வெளிப்படையான செயல்களில் தான் காண முடிகிறது. இவை மட்டும் தானா ஆன்மிகம்…?


இதோ நம் நாட்டையும் நாட்டில்லுள்ள மக்களையும் மக்களின் தன்மையையும் பற்றி ஒரு ஆங்கிலேயனின் அறிக்கை…
“நான் இந்தியாவில் எல்லா இடங்களுக்கும் சென்று வந்தேன்… அங்கு ஒரு பிச்சைக்கரானையோ, திருடனையோ நான் பார்க்க முடியவில்லை, அபரிமிதாமான செல்வத்தையும், மிக உயர்ந்த கொள்கைகளுடைய மக்களையும் காண முடிந்தது. இப்படிப்பட்ட மக்களை உடைய இந்தியாவை நாம் அடிமைப்படுத்த வேண்டுமென்றால், இந்நாட்டின் முதுகெலும்பாகிய ஆன்மீகத்தையும், உயரிய பண்பாட்டையும் உடைத்தெறிய வேண்டும், மேலும் அவர்களுடைய பழமையான பாரம்பரியமிக்க கல்விமுறையை மாற்றி… ஆங்கிலமும், அந்நிய தேசமும் உயர்ந்தது, சிறந்தது என்று மக்களை நம்பும்படியாக செய்வதின் மூலம் நாம் விரும்பும் வண்ணம் அவர்களை ஆட்டுவிக்க முடியும்.” இவ்வாறு இந்த அறிக்கை ஆங்கில அரசிடம் சமர்பிக்கப்பட்டது, சமர்ப்பித்தவர் “லார்ட் மெக்காலே”… இவர் வடிவமைத்த கல்வி முறையை தான் நாமும் நம் மக்களும் இன்றும் கற்றுக்கொண்டிருக்கின்றோம்…
இதனால் பாதிக்கப்பட்டது நாமும் நம் நாட்டு மக்களும் தான்… இன்றைய சமூக சீர்கேடுகளுக்கு காரணம் நம் நாட்டின் பண்பாட்டை நம் சமூகத்திலிருக்கும் மக்களுக்கு கொண்டு சேர்க்காததுதான், ஆக நாம் செய்யவேண்டியதெல்லாம், இந்த அற்புதாமான கல்விதனை நம் மக்கள் அனைவருக்கும் கொண்டு செல்லவேண்டும்.
“பாருக்குள்ளே நல்ல நாடு… எங்கள் பாரத நாடு…” என்னும் பாரதியின் பாடல் வரிகளுக்கேற்ப, நம் நாடு சிறந்து விளங்க வேண்டும்… அதற்காக நாம் தினமும் சில மணி நேரங்கள் செலவிட வேண்டும்…
பழைமையான கல்வி முறையில் உடல் ஆரோக்கியம் இருந்தது, கல்வியினால் மனம் பண்பட்டது, உயர்ந்த சிந்தனை இருந்தது… அதை நாம் மறந்துவிட்டோம். நம் நாட்டின் ஆன்மீகத்தையும், பண்பாடையும் மீண்டும் மக்களின் மனதில் உயிர்தழ செய்வதே நம் ஒவ்வொருவரின் நோக்கமாக இருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment