25/05/2012

மனுஸ்மிருதி,திருக்குறள்-ஓர் ஒப்பீடு

 

ஆரியன் என்றால் உயர்ந்தவன், மேன்மையான தர்மநெறியில் வாழ்பவன். வேதம் முதற்கொண்டு திருக்குறள்,திருமந்திரம் என அனைத்து நூல்களும் கூறும் நன்னெறியே உயர்ந்த வாழ்வியல் நெறி. யார் அவற்றைப் பேணி வாழ்கின்றனரோ அவரே ஆரியர் ஆகவே அவ்வறத்தைக் கைக்கொண்டு வாழும் தமிழர் அனைவரும் ஆரியரே!

ஊர் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என்று அவ்வூரின் முன்னேற்றத்தை விரும்புவோர் நினைப்பது இயல்பு. கூத்தாடிகளுக்கு ஊர் இரண்டுபட்டால்தானே கொண்டாட்டம். நாமும் அதுபோல தமிழும் ஆரியமும் வேறல்ல ஒன்றுதான் எனும் உண்மையைத் தெளிவுறுத்துகின்றோம், ஆனால் குழப்பவாதிகளின் கருத்துகளுக்கு நமது தமிழன்பர்கள் சிலரும் பலியாகி அவர்களது ஊதுகுழலாகிவிட்டனர் அதுதான் வருத்தமாக இருக்கிறது.

சரி விஷயத்துக்கு வருவோம், இங்கு நாம், (உள்நோக்கத்துடன்) தவறாகப்புரிந்துகொள்ளப்பட்ட மனுசாஸ்திரத்துக்கும் திருக்குறளுக்கும் உள்ள ஒற்றுமைகள் பலவற்றைப் பார்ப்போம்.

வேதத்தைக் கற்பது, வேதத்தைக் கற்பிப்பது; யாகம் செய்வது, யாகங்களைச் செய்விப்பது; தானம் வாங்குவது, தானம் செய்வது – என்ற ஆறு ‘தொழில்கள்’ பிராமணனுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

இதைக் கூறுகிற மனு ஸ்ம்ருதி வாசகம் இது :

அத்யாபனம் அத்யயனம்
யஜனம் யாஜனம் ததா
தானம் ப்ரதிக்ரஹ ஸ்சைவ
ஷட் கர்மாண்யக்ரஜன்மன:
(75/467)



திருக்குறள்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.


உரை:
காவலன் காவான் எனின் – காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவான் ஆயின்;
ஆபயன் குன்றும் – அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்;
அறுதொழிலோர் நூல் மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
ஆபயன் – ஆவால் கொள்ளும் பயன்,
அறுதொழில்களாவன (வேதம்) ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை.


திருக்குறள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.


மனுஸ்மிருதி

இத்யேதி: கர்மபிர்வ்யஸ்தா
த்விஜா வர்ணாந்தரம் கத:
தர்மோ யக்ஞ்யக்ரியா தேஷாம்
நித்யம் ந ப்ரதிஷித்யதே


பொருள்

பிராமணர்களே தங்கள் நியமங்களைக் கைவிட்டதால், வெவ்வேறு செயல்முறைகளை மேற்கொண்டு, மற்ற மூன்று வர்ணங்களைச் சார்ந்தவர்கள் ஆனார்கள்.

மனுஸ்மிருதி

சூத்ரோ ப்ராம்மணதாமேதி
ப்ராம்மணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதமேவம் து
வித்யாத் வைச்யாத் ததைவ ச

பொருள்

சூத்திரன் பிராமணன் ஆகலாம்; பிராமணனும் சூத்திரன் ஆகலாம்; அதேபோல, க்ஷத்ரிய மற்றும் வைச்ய வகைகளைச் சார்ந்தவர்களின் மகன்களும், வேறு வர்ணத்தை அடையலாம்.

மனுஸ்மிருதி

கோரக்ஷகான் வாணிஜிகாம்ஸ்ததா
காருகுசீலவான்
ப்ரேஷ்யான் வார்துஷிகாம்ஸ்சைவ
விப்ரான் சூத்ர வதாசரேத்

ஆடு, மாடுகளை வளர்த்துக்கொண்டும்; வர்த்தகம் செய்தும்; கை வேலை செய்பவர்களாகவும், நடிகர்கள் மற்றும் பாடகர்களாகவும், வட்டிக்குப் பணம் தருகிறவர்களாகவும் வாழ்கிற பிராமணர்கள், சூத்ரர்களாகவே கருதத்தக்கவர்கள்.

திருக்குறள்

மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்


உரை

ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின், பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக்கெடும்.
திருக்குறள்

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
 – 57

மனுஸ்மிருதி-9 : 12

பெண்களை வீட்டினுள் நம்பிக்கைக்குரிய காவலர்கள்மூலம் காத்துவைதிருத்தல் மூலம் அவரது ஒழுக்கத்தைக் காத்துவைத்திடமுடியாது. அவர்கள் தாமாகவே உறுதியுடன் தமது ஒழுக்கத்தைக் காத்துக்கொள்வதே சிறந்தது.
நிறைவுரை

வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.
– செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்


கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே (35)


நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே (37)

எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை ‘மேல்வருக‘ என்பர் (38)

கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே (36)

-அதிவீர ராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை

இவை யாவும் நமது முன்னோர்களான தமிழர்கள் நமது அற நெறி இது என்று சொல்லிவைத்த பாடல்கள். பலருக்கு ஜி.யு.போப் வகையறாக்கள் மட்டுமே தமிழர்களாகத் தெரிகின்றனர் போலும்

19/05/2012

ஆதிசங்கரர்வரலாறு




ஆதிசங்கரர், நமது பாரத புண்ணியபூமியின் தர்மத்தைக்காக்க வந்த சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

இந்த புண்ணிய பூமியின் சனாதன தர்மமும்,வேத நெறிகளும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு ஆன்மிக, வாழ்வியல் வானில் இருள் சூழ்ந்த வேளையில் ஆதிசங்கரரது அவதாரம் நிகழ்ந்தது.

ஆதிசங்கரரது தவ வலிமையாலும் அறிவுக் கூர்மையினாலும் பாரத தர்மம் புத்துயிர்பெற்றது. வேதநெறியைச் சூழ்ந்திருந்த கருமேகங்கள் விலகின. மக்களின் வாழ்வும் மலர்ந்தது.

ஆதிசங்கரர் கீர்த்திஸ்தம்ப மண்டபம்,காலடி

தோற்றம்

கேரளத்தின் காலடியில், தானமும் தவமும் தம் இரு கண்கள் எனப் போற்றி வாழ்ந்துவந்த அந்தண தம்பதிகளான சிவகுரு,ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு நீன்டகாலமாக ஒரு குழந்தைச்செல்வம் இல்லையே என்ற மனக்குறை இருந்து வந்தது. அம்மனக்குறை நீங்கவேண்டி அவர்கள் திருச்சூரில் அருள்பாலித்துவரும் வடக்குநாதரிடம் ஒருமண்டலம் விரதமிருந்து குழந்தைவரம் வேண்டினர். அவர்களது மனமார்ந்த வேண்டுதலை ஏற்றுக்கொண்ட சிவன் அவர்தம் மேன்மையை உலகுக்கு உணர்த்தவிரும்பியவராக அவர்களிடம் நீண்ட ஆயுளும் குறைந்த அறிவுமுடைய குழந்தை வேண்டுமா? அல்லது அறிவிற்சிறந்த குறைந்த ஆயுளை உடைய குழந்தை வேண்டுமா? என்று கேட்டார், இறை நம்பிக்கையும் பக்தியும்கொண்ட அவர்கள் இறைவன் திருவுள்ளம் எதுவோ அதன்படியே தமக்கு குழந்தைப்பேறு அளிக்குமாறு வேண்டினர். அவர்தம் பக்தியை உலகுக்கு உணர்த்திய இறைவன் தானே அவர்களுக்கு மகனாக அவதரித்தார்.

பொ.வ 788 ஆம் வருடம் திருவாதிரை நட்சத்திரத்தில் மகான் சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது. சங்கரர் பிறந்த சிறிது காலத்திலேயே தமது தந்தையை இழக்க வேண்டியதாயிற்று அதன் காரணமாக அவரது உபனயனம் தாமதமானது. பிறகு அவரது தாயாரால் உபனயனம் நிகழ்த்திவைக்கப் பட்டது. அந்த இளம்வயதிலேயே சங்கரரது அறிவுக்கூர்மை வெளிப்பட்டது. தனது எட்டாம் வயதில் சங்கரர் நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

 

ஒருமுறை பிச்சை எடுக்கச்சென்ற சங்கரர், தனது ஏழ்மைநிலையையும் பொருட்படுத்தாமல் தனக்கு உணவாக வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் தனக்கு பிச்சையாக இட்ட பெண்ணின் செயலை வியந்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார் உடனே அங்கு தங்க நெல்லிக்காய்கள் மழையாகப் பொழிந்தன அப்பெண்ணின் ஏழ்மை மறைந்தது.



சன்னியாசம்

வேதங்களையும் சாஸ்த்திரங்களையும் கற்றுத்தேர்ந்த சங்கரை கிருஹஸ்த்தனாக ஆக்கிப்பார்க்க வேண்டும் என்று அவரது தாயார் விரும்பினார். ஆனால் சங்கரரோ தனது அவதாரநோக்கம் நிறைவேறும் பொருட்டு சன்னியாசி ஆக விரும்பினார்

 

தாயின் ஆசியுடன் சன்னியாசம் பெற விரும்பிய சங்கரர் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். அன்று வழக்கம்போல் சங்கரர் பூர்ணா ஆற்றில் நீராடச்சென்றபோது, திடீரென்று ஒருமுதலை அவரது காலைக் கவ்வியது அதைக்கண்ட அவரது தாயார் மனம் பதைத்தார், தன்னைச் சன்னியாசியாக அனுமதித்தால் முதலை விட்டுவிடும் என சங்கரர் கூறியதை ஏற்ற அவரது தாயார் அதற்கு அனுமதியளித்த மறுகணமே முதலை சங்கரரை விட்டுவிட்டு மறைந்தது.

குருவை அடைதல்

தாயின் அனுமதியையும், ஆசிகளையும் பெற்றுக்கொண்டு சங்கரர் ஒரு சத்குருவைத் தேடி வடக்குநோக்கிச் சென்றார்

வடதிசை நோக்கிச்சென்ற சங்கரர் நர்மதை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஓம்காரேஷ்வர் எனுமிடத்தில் கௌடபாதரின் சிஷ்யரான கோவிந்த பகவத்பாதரை சந்தித்தார். ஆதிசங்கரரின் புலமையைக் கண்டுகொண்ட கோவிந்தபகவத்பாதர் அவரைத் தனது சிஷ்யராக ஏற்றுக்கொண்டார்.

குருவின் விருப்பத்திற்கிணங்கி பிரம்மசூத்திரங்களுக்கு விளக்கவுரை எழுதியதோடல்லாமல் வேதாந்தக் கொள்கையான அத்வைத கொள்கையை நாடெங்கும் பரப்பினார்.

சங்கரர் காசியில் இருந்தபொழுது சோழதேசத்திலிருந்துவந்த சனந்தன் என்பவரைத் தனது முதல் சிஷ்யனாக ஏற்றுக்கொண்டார்.

 

ஒருமுறை சங்கரர் தனது சிஷ்யர்களுடன் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ஒரு குறுகியபாதைவழியாகச் செல்லும்பொழுது எதிரில் நான்கு நாய்களைப்பிடித்தபடி ஒரு நாகரீகமற்ற மனிதன் வருவதைக் கண்டார், சங்கரரது சிஷ்யர்கள் அம்மனிதனை, சங்கரருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாமல் விலகிச்செல்லச் சொன்னபோதுஅந்த ஞானி எதை விலக சொல்லுகிறாய்? என் உடலையா? என் ஆன்மாவையா எனக் கேட்டார். இந்த ஆழ்ந்த ஞான கருத்துக்களைக் கேட்டு சிஷ்யன் நிலைகுலைந்து போனான். தன் குரு கூறும் கருத்துக்களை நாயுடன் உலாவும் இவர் எப்படி கூறுகிறார் என அதிர்ந்தான். ஆதிசங்கரர் அந்த ஞானியைப் போற்றியும் அந்த ஞானியுடன் உறையாடியதையும் மனீஷபஞ்சகம் என்ற நூலாகத் தொகுத்தார். அந்த ஞானி வேறுயாருமல்ல அவர் சாட்சாத் அந்த பரமசிவனேதான், நான்கு வேதங்களே அவரது நாய்களாக வந்தவை.

மண்டனமிஸ்ராவைஆட்கொள்ளுதல்

சங்கரர் அத்வைதத்தை நிலைனிறுத்தும்பொருட்டு மீமாம்ச தத்துவ ஞானியான குமாரிலாபட்டருடன் வாதம்செய்ய விரும்புகிறார், ஆனால் பௌத்த கொள்கைகளை தர்கரீதியாக வெல்ல நினைத்த குமாரிலாபட்டர் தனது அடையாளத்தை மறைத்து ஒரு பௌத்த குருவை அடைந்து அம்மத தத்துவங்களைக் கற்றுக்கொள்கின்றார், இவ்வாறு குருவைத் தான் ஏமாற்றிய பாவத்துக்கு பிரயாசித்தமாக எரியும் உமிக்கு நடுவில் தனது வாழ்க்கையை முடித்துகொள்ளும் நோக்கில் அமர்ந்திருந்தார் ஆகவே அவர் தனது சிஷ்யரான மண்டனமிஸ்ராவிடம் சென்று வாதம் புரியுமாறு சங்கரரைக் கேட்டுக்கொண்டார்

சங்கரரும் மண்டனமிஸ்ராவும் 15 நாட்கள் தர்க்கம் புரிந்தனர். அவர்களுக்கு மண்டனமிஸ்ராவின் மனைவியும் சிறந்த அறிவாளியுமான உபயபாரதி நடுவராக இருந்தார். இறுதியில் மண்டனமிஸ்ரா தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் உபயபாரதி சங்கரரை வாதத்துக்கு அழைத்தார், முழுமையான வெற்றியை நிலைநிறுத்துவதற்காக சங்கரரும் அவருடன் வாதம்செய்ய ஒப்புக்கொண்டார்.

சன்யாசியான சங்கரரிடம் ஆண்,பெண் இடையே நிகழும் தாம்பத்ய உறவைப்பற்றிய கேள்விகளை உபயபாரதி தொடுத்தபொழுது தனது உன்னத ஞான ஆற்றலால் அவற்றிற்கு தக்க பதிலலித்து வாதத்தில் வெண்றார் சங்கரபகவத்பாதர்.

இந்தவெற்றியின் விளைவாக முன்பே ஒப்புக்கொண்டபடி மண்டனமிஸ்ரா துரவறம் பூண்டு சங்கரரின் சிஷ்யரானார். சங்கரர் அவருக்கு சுரேஷ்வராச்சார்யா எனும் பெயரிட்டு தனது சிஷ்யராக்கிக் கொண்டார். 

சங்கரரது திக் விஜயம்

சங்கரர் தனது சீடர்களுடன் தனது தேச யாத்திரையைத் தொடங்கினார். ஸ்ரீசைலம் சென்ற சங்கரர் சிவனைப் போற்றும் சிவானந்தலகரி எனும் பாடலை இயற்றினார்.
ஒருசமயம் கபாலிகன் ஒருவனின் வஞ்சகமான வேண்டுகோளுக்கு இணங்கி சங்கரர் தன்னை பலியாக அர்ப்பணம்செய்ய இருந்த நேரத்தில் இதை தனது ஞான திருஷ்டியால் உணர்ந்த அவரது சிஷ்யர் பத்மபாதர் பகவான் நரசிம்மரை வேண்ட பகவான் நரசிம்மர் சிம்மரூபத்தில் தோன்றி அந்த கபாலிகனை வதம்செய்தருளினார். இங்கு ஆதிசங்கரர் நரசிம்மரைப் போற்றி லக்ஷ்மினரசிம்ம ஸ்தோத்திரத்தை இயற்றினார்.

பிறகு கொல்லுர் சென்ற சங்கரர் அங்கு மூகாம்பிகைகோவிலில் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவனை மேண்மை அடையச்செய்து அவரை ஹஸ்த்தமலாக்கா எனும் பெயரிட்டு தனது சீடராக்கிக்கொண்டார்.தன்னை வந்தடைந்த கிரி எனும் சிறுவனை ஞானமலித்து தோடகாச்சார்யாராக ஆக்கினார்.

அதன்பின் பாரததேசமெங்கும் சுற்றுப்பயனம்செய்து சமணர்களையும், தாந்த்ரீக அறிஞர்களையும் வாதத்தால் வென்றார். காஷ்மீரம் சென்று உயர்ந்த ஞானபீடமான சர்வக்யபீடத்தை அலங்கரித்தார்.
இவ்வாறு பாரதம் முழுவதும் தர்மத்தை நிலைனிருத்திய சங்கரர் அவற்றை பரிபாலனம் செய்யும்பொருட்டு நான்கு மடங்களையு நிறுவினார்.

முதல் மடம் சிருங்கேரியில் நிறுவப்பட்டது.