30/04/2012

திராவிடமும் தமிழும் ஆரியமும்

707

அனைவருக்கும் வணக்கம் நமது தமிழகத்தில் தமிழ், சமஸ்கிருதம், மற்றும் நமது தர்மத்தின் அடிப்படையான வேதம், ஆகமம் ,திருமுறைகள் ஆகியவற்றைப்பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் அலசப்படுகின்றன. இங்கு, சிலர் திரும்பதிரும்ப வலியுறுத்தி நிறுவ விரும்புவது.

1) தமிழர் வேறு ஆரியர் வேறு
2) தமிழும் சமஸ்கிருதமும் பகை மொழிகள்
3) தமிழ் சான்றோர்கள் சமஸ்கிருதத்தைப் புறக்கணித்தனர்
4) சமஸ்கிருதத்தில் உள்ள வேத நெறியும் தமிழர்களுடைய வாழ்வியல் நெறியும் மாறுபட்டவை
5) தமிழர்களுக்கென்று (தமிழ்பேசும் ஹிந்துக்களுக்கு மட்டும்) தனிப்பட்ட வேதம் உள்ளது

என்பதுபோன்ற ஆதாரமற்ற கற்பனைகளைத்தான்

1) தமிழர் வேறு ஆரியர் வேறு

உண்மையிலேயே நமது தமிழ் அன்பர்கள் சிலர் சமஸ்கிருதம் அயலர்மொழி என்றும் இந்தியாவில் ஆரியர் திராவிடர் எனும் இரு இனங்கள் உள்ளன என்றும் இதில் ஆரிய இனம் திராவிட இனத்தை அடிமைப்படுத்தியது என்றும் நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கைக்குக் காரணம் நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட பொய் வரலாறு. இந்தப்பொய் உறுதியான பல ஆதாரங்கள் மூலம் தகர்க்கப்பட்டும் இன்னும் நமது புத்தகங்களில் மாற்றப்படாமல் உள்ளது. அதற்குக்காரணம் நமது நாட்டை ஆளும் காங்கிரசும் , இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்களோ என்று அஞ்சும் இடதுசாரிகளும், சுயநலவாதிகளான நாத்திகவாதிகளும், மொழிப்பற்றையும், இனப்பற்றையும் திசைதிருப்பி பிழைப்புநடத்தும் திராவிட கட்சிகளும் அவர்களுக்குப் படியளந்த ,அளக்கும் தோழர்களான கிருத்துவ மிஷனரிகளும் தான்.

இந்தப் பொய்பிரச்சாரத்தின் வேர் ஜெர்மானியர்களின் இனப்பெருமிதம் எனும் கோட்பாட்டில் ஆரம்பித்து பிரித்தாளுவதற்காக ஆங்கிலேயரால் வளர்க்கப்பட்டு, இன்று சுயநலத்துக்காக, ,திராவிடரை முன்னேற்ற கடலில் விழுவதாகக் கூறுபவர்கள் முதற்கொண்டு நாத்திகவாதிகள் மிஷனரிகள் என்று பலதரப்பட்ட தன்னலவாதக் கும்பல்களால் பேணப்படுகிறது. இதற்கு சில அப்பாவி ஆன்மீகவாதிகளும் பொதுமக்களும் பலியாகிவிடுவதுதான் மிகப்பெரிய வேதனை.
மேலும் தெரிந்துகொள்ள

The Myth of Aryan Invasion theary
Death of Aryan invasion theary
Aryan Invasion — History or Politics?

இந்த ஆரிய திராவிட பிரிவினையை தமிழகத்தில் இருந்தவர்கள் அரசியல் ஆதயத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டனர் தமிழரிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தினர் அவர்கள் தம்மை தமிழினக் காவலர்களாகக் காட்டிக்கொண்டனர்.( தமிழைக்காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவரை வெட்கம்கெட்டுதந்தைஎன்று சொல்லுவது அறிவுடைமை! தன்மானம்! முலையிலிருந்து தீ வைத்து எரித்தாளாம்! கற்புக்கரசியாம்! முட்டாள் பெண்பிள்ளை! இது கண்ணகிக்கு ஈ.வே.ரா கொடுத்த வெகுமதி )

அந்த தாழ்வுமனப்பான்மையின் வெளிப்பாடுதான்

// ஆரியர்களுக்கு தயிர், மோர், வெண்ணை எல்லாம் தெரியாது அதற்குபதிலாக சாணத்தையும் கோமியத்தையும் பஞ்சகாவ்யத்தில் சேர்துவிட்டனர்// 

// அகத்தியர் ஆரியன்,அவர் தமிழைத் திருடினார்//

என்பதுபோன்ற எண்ணற்ற பிதற்றல்கள்,

உண்மை என்னவென்றால் சமஸ்கிருதம் ஒரு இனத்தின், ஜாதியின் மொழி அல்ல.

2) தமிழும் சமஸ்கிருதமும் பகை மொழிகள்

எக்காலத்திலும் மொழிகள் தானாக கத்தியெல்லாமெடுத்து சண்டைப்போடா. இனங்களுக்குள் நடக்கும் மோதலில் மொழிகளின் ஆதிக்கம் வரலாம் இங்கு சமஸ்கிருதம் பொது மொழியாகவே இருந்துள்ளது இந்திய மொழிகள் அனைத்துடனும் கலந்துள்ளது. அனைத்து இனத்தவரும் அப்பொதுமொழியை வளப்படுத்தி உள்ளனர். ஆகவே இக்கருத்து பொய்யானது.

3) தமிழ் சான்றோர்கள் சமஸ்கிருதத்தைப் புறக்கணித்தனர்

நாத்திகர்களின் பொருளற்றவாதம் எடுபடாதநிலையில் ஆத்திகர்களின்போர்வையில் நடத்தும் பொய்ப்பிரச்சாரம் இது

முதலில் தமிழ் உயர்ந்தது என்பார்கள், அதற்கு ஆதாரமாக சமய ஆன்றோர்கள் தமிழை சிறப்பித்துக் கூறியதைப்போட்டுவிட்டு. பார்த்தீர்களா அவர்கள் வடமொழியை புறக்கணித்தனர் என்பர். அவர்கள் அவ்வாறு வடமொழியைத் தள்ளவில்லையே என்று கேட்டால் நம்மை வடமொழி ஆதரவாளன் என முத்திரை குத்தி வாதத்தை திசைதிருப்புவர். 

சான்றோர்கள் வேதம் முதலான சமஸ்கிருத நூல்களின் சிறப்பை கூறும் பாக்களை மேற்கோள் காட்டினால் அவர்கள் கூறியது மறை, மறைவேறு வேதம் வேறு என்பர் பிறகு // வேதம் தமிழ்வார்த்தை// என்பார்கள் அதற்க்குப் பொருத்தமில்லாத இலக்கணமும் எழுதுவார்கள். யாராவது பகுத்தறிவோடு கேள்விகேட்டால் வசைமாரிதான். ஆனால் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் மட்டும் வரவே வராது. உண்மையில் தமிழை அழிப்பவர்கள் யார் என்று அனைத்து தமிழரும் தம்மைத்தாமே கேட்டுக்கொண்டால் நல்லது. "அவலை நினைத்து உரலை இடிப்பது" என்பது இதுதான்.

4) சமஸ்கிருதத்தில் உள்ள வேத நெறியும் தமிழர்களுடைய வாழ்வியல் நெறியும் மாறுபட்டவை
5) தமிழர்களுக்கென்று (தமிழ்பேசும் ஹிந்துக்களுக்கு மட்டும்) தனிப்பட்ட வேதம் உள்ளது


கடைசியாக இங்குவந்து நிற்பார்கள் இதன் பிண்ணனி தமிழரை மற்ற ஹிந்துக்களிடமிருந்து பிரிப்பது இதற்குத், தலைவர்கள்,, பகுத்தறிவு பகலவன்கள் என்று நாத்திகவாதிகளை துணைக்கு வைத்துக்கொள்வார்கள். இந்த இடம்தான் சாயம் வெளுத்து வேடம் வெளிப்படுமிடம். திருமுறைகளுக்கும் நாத்திகர்களுக்கும் என்ன தொடர்பு. அவர்களை பந்திக்கே கூப்பிடவில்லை இங்குவந்து இலைஓட்டை என்றால்எப்படி?

ஆன்மிக அன்பர்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள் "நாம் அனைவரும் உயர்ந்த ஞான பரம்பரையின் வாரிசுகள், அதன் மூலம், இந்தியாவெங்கும் பரவி இருக்கிறது. வேதமும் வடமொழியும் நமது சொந்த சொத்துகள், இந்த உண்மையை மறக்கவேண்டாம்" நமக்கு இங்கு வீரத்துறவி விவேகானந்தர் நல்லதொரு வழிகாட்டி.

வானவன்காண் வானவர்க்கு மேலா னான்காண்
வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்தும் ஆடி னான்காண்
ஐயன்காண் கையிலனல் ஏந்தி யாடும்
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
கருதுவார் இதயத்துக் கமலத் தூறும்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.- திருச்சிவபுரம்

(நால் வேதங்களாகவும்,வடமொழியும்,தமிழுமாகவும்இறைவன் உள்ளான் எனக்கூறும் பாடல் இது)


மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.-திருமறைக்காடு

(இறைவன் ஆரியனாக,அதாவது மிகவும் உயர்ந்தவனாக இருக்கும் அதேசமயம் தன்னைஒத்தவனாகவும் இருக்கும் தன்மையைத் திருநாவுக்கரசர் விளக்கிக் கூறும் பாடல் இது)


மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே-திருவாசகம்

இப்பாடல்களை நன்றாக ஆராய்ந்தால் மேற்கண்ட உண்மைகள் விளங்கும்.

சம்ஸ்க்ருதம் வடநாட்டு மொழியா?






தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய மு. வரதராசன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா?
வடமொழியில், இலக்கியச் செல்வத்தையும் சமயக் கருத்துகளையும் கலைக் கொள்கைகளையும் விரிவாக எழுதி வைத்தார்கள். அவ்வாறு வடமொழியில் எழுதி வைத்தவர்களில் பலர் தென்னாட்டு அறிஞர்கள் என்பதைப் பலர் மறந்து விடுகிறார்கள். வடமொழியில் காவ்யாதர்சம் எழுதிய அறிஞர் தமிழ்நாட்டுக் காஞ்சிபுரத்தைச் சார்ந்த தண்டி என்ற தமிழர்.

அத்வைத நூல்கள் பல எழுதிய சான்றோர் சங்கரர் தென்னிந்தியர். விசிஷ்டாத்வைத விளக்கம் எழுதிய சான்றோர் இராமாநுசர் காஞ்சிபுரப் பகுதியைச் சார்ந்த தமிழர். பரத நாட்டியம் பற்றியும் கர்நாடக சங்கீதம் பற்றியும், சமையல் முதலியன பற்றியும் உள்ள வடமொழி நூல்கள் பல, தமிழ்நாட்டுக் கலைகளையும் வாழ்க்கை முறைகளையும் ஆராய்ந்த அறிஞர்கள் எழுதியவை’ (பக்கம் 13, தமிழ் இலக்கிய வரலாறு)

தமிழர் வேறு, சம்ஸ்க்ருதம் வேறு, என்பது பாதிரியார்களால் தோண்டப்பட்ட பள்ளம். இந்தப் பள்ளத்தைப் பதுங்கு குழியாக மாற்றியவர் மறைமலை அடிகள். இவருடைய தனித்தமிழ் இயக்கத்தை நம்பி பொதுவுடைமையாளர் ஜீவா ஆர்வத்துடன் செயல்பட்டார். ஆனால் மறைமலை அடிகளைச் சந்திக்கச் சென்ற ஜீவாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் ஜீவா தன்னுடைய பெயரைஉயிர் இன்பன்என்று மாற்றிக்கொண்டிருந்தார். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியான மறைமலை அடிகளைச் சந்திப்பதற்காக சென்னையின் புறநகர்ப்பகுதியான பல்லாவரத்துக்குச் சென்றார் ஜீவா.

வீட்டின் உள்ளே இருந்த அடிகளார், வாசலில் காலடி ஓசை கேட்டதும்யாரது, போஸ்ட் மேனா?’ என்று கேட்டார். ‘போஸ்ட் மேன்என்ற வார்த்தை தமிழ் இல்லையே என்று யோசித்தார் ஜீவா; யோசித்தபடியே உள்ளே சென்றார்; மறைமலை அடிகளிடம் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார்.

என்ன காரணமாக வந்தீர்கள்?’ என்று கேட்டார் அடிகளார். ஜீவாவுக்கு இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. ‘காரணம் என்பது தமிழ்ச்சொல்லா?’ என்று கேட்டுவிட்டார். ‘காரணம் என்பது எம்மொழிச்சொல் என்பது இன்னும் முடிவு செய்யவில்லைஎன்றார் அடிகளார்.

மறைமலை அடிகளின் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜீவாஉயிர் இன்பன்என்ற பெயரை உதறிவிட்டார்.

ஆனால் ஜீவாவுக்கு ஏற்பட்ட ஞானோதயம் இன்னும் சிலருக்கு ஏற்படவில்லை. தமிழன் எக்காலத்திலும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டும் என்பதே இவர்களின் லட்சியமாக இருக்கிறது. சமஸ்க்ருதத்திற்கு எதிராக இவர்கள் எழுதும் எழுத்திலும் பேச்சிலும் சூடு அதிகமாகவும் சுவை குறைவாகவும் இருக்கிறது.

தனித்தமிழ் முன்னோடி மறைமலை அடிகளோடு பொதுவுடைமையாளர் ஜீவாவுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பார்த்தோம்.

தமிழில் உள்ள சமஸ்க்ருதச் சொற்கள் பற்றி பண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கும் மறைமலை அடிகளுக்கும் வந்த கருத்து மோதலைப் பார்ப்போம்.

கரந்தை என்ற ஊரில் நடந்த நிகழ்ச்சிக்கு மறைமலையடிகள் தலைமை வகித்தார். அடிகள் பேசும்போதுசங்க நூல்கள் எல்லாம் தனித்தமிழ் நூல்கள்; அவை வடசொல் கலப்பு இல்லாதவைஎன்று கூறினார்.

பண்டிதமணி இதற்குப் பதிலுரையாகசங்கநூல்களில் சிறந்ததும் கற்றறிந்தோர் போற்றுவதுமான கலித்தொகையில்தேறுநீர் சடக்கரந்து திரிபுரம் தீமடுத்துஎன்று முதல் பாடலிலேயே சடை, திரிபுரம் ஆகிய வடசொற்கள் வந்திருக்கின்றனவேஎன்றார்.

அடிகளார் அடங்குவதாக இல்லை, தேவார, திருவாசகங்கள் தனித்தமிழில் ஆக்கப்பட்ட தென்று கூறினார்.

உடனே, பண்டிதமணி எடுத்துக்காட்டாக திருநாவுக்கரசர் தேவாரத்தில் முதல் பதிகத்தில்

சலம் பூவோடு தூபம்மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்

என்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார். சலம்; தூபம் இரண்டும் வடசொல் என்பதையும் இவ்வாறு பல இடங்களில் வடசொற்கள் கையாளப் பெற்றிருக்கின்றன என்பதையும் பண்டிதமணி கூறினார்.

அடிகளாருக்குக் கோபம் வந்துவிட்டது; கோபமாக மேசையைக் குத்தினார்.

எனக்கும் ஒரு மேசை போட்டிருந்தால் இதைவிட வலுவாகக் குத்தி ஓசையை எழுப்பியிருப்பேன்; என்றார் பண்டிதமணி.

‘When you are strong in law, talk the law;
When you are strong in evidence, talk the evidence;
When you are weak in both, thump the desk ‘

என்ற வழக்கறிஞர்களுக்கான வாசகத்தை இந்த நிகழ்ச்சி நினைவுபடுத்துகிறது.

source :
திரு சுப்பு அவர்கள் - tamilhindu.com

23/04/2012

தமிழரின் உண்மையான புத்தாண்டு


File:Hindu calendar 1871-72.jpg

இந்திய நாள்காட்டி முறைகளின்படி ஆங்கிலமாதங்களான ஏப்ரல்-மே மாதவாக்கில் பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. நாம் காலத்தை அளவிட நிலவின் நிலைகளை அடிப்படையாகக் கொண்ட முறை, சூரியனின் நிலைகளை அடிப்படையாகக்கொண்ட முறை, நிலவு சூரியன் ஆகிய இரண்டின் நிலைகளையும் அடிப்படையாகக் கொண்ட முறை மற்றும் வியாழன் கிரகத்தின் நிலைகளை அடிப்படையாகக் கொண்ட முறை என்று பலவிதமான கணக்கீட்டு முறைகளைப் பயன்படுத்திவருகிறோம்.

நமது நாட்காட்டிகள் பொதுவாக நிலவு சூரியன் ஆகிய இரண்டின் நிலைகளையும் அடிப்படையாகக் கொள்ளும் கணக்கீட்டுமுறையையே பின்பற்றுகின்றன அவற்றில் இராசிகளே மாதங்களைக் குறிக்கப் பயன்படுகின்றன.

நம்நாட்டின் சில பகுதிகளில் சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் வானில் இருக்கும் நிலைகளை அடையாளமாகக் கொள்கின்றனர் அம்முறைக்கு சௌரமனம் எனப்பெயர்.

சில பகுதிகளில் சந்திரன் மற்றும் இராசிகளை அடையாளமாகக் கொள்கின்றனர் இம்முறையில் மாதத்துவக்கமானது வளர்பிறை மற்றும் தேய்பிறையையும் சூரியன் ராசிமண்டலங்களில் சஞ்சரிக்கும் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இம்முறைக்கு சந்திரமனம் என்று பெயர்.

கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநில மக்கள் சந்திரமன முறையைப் பின்பற்றுவதால் அமாவாசை முடிந்ததும் புது நிலவு தெரியும் முதல் நாளை வருட ஆரம்பத்திற்கான நாளாக வைத்துள்ளனர்.


சௌரமன முறையைப் பின்பற்றும் தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப், அஸ்ஸாம் மாநில மக்கள் சூரியன் மேஷ ராசியைக்கடக்கும் காலத்தை புத்தாண்டாகக் கணக்கிடுகின்றனர்.

வருடகணக்கைப் பொருத்த அளவில் வியாழனின் நிலையை அடிப்படையாகக் கொண்ட 60 வருட கால சுழற்சி முறையையே அனைவரும் பின்பற்றுகின்றனர். இந்த 60 வருடங்களும் அவற்றின் தனிப்பட்ட தன்மைகளைக் குறிக்கக்கூடிய தனிப்பட்ட பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இந்த 60 வருட சுற்றுமுடிந்ததும் வரும் 61 ஆவது வருடம் 60 வருடங்களின் பெயர்களில் முதலில் உள்ள வருடத்தின் பெயரையே பெறும்.

சூரியன், சந்திரன், பூமி, வியாழன், மற்றும் சனி கிரகங்களின் நிலையின் அடிப்படையிலேயே இந்த 60 வருட சுழற்சி கணக்கிடப்படுகிறது. பூமி சூரியனை சுற்றிவர ஒரு வருட காலம் ஆகும் அதேசமயம் வியாழன் சூரியனை சுற்றிவர

12 வருடங்களையும், சனிகிரகம் 20 வருடங்களையும் எடுத்துக் கொள்கின்றன. பூமி, சந்திரன், சூரியன், வியாழன், சனி ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில்வர 60 வருடங்களை எடுத்துக்கொள்கின்றன.

இந்த 60 வருட சுழற்சி மனவ யுகம் என அழைக்கப்படுகிறது ஏனென்றால் ஒருமனிதனின் முதன்மை ஆயுள் 60 வருடங்கள் எனக் கருதப்படுகிறது. மனிதன்,பூமி,சந்திரன், சூரியன்,வியாழன், சனி ஆகியவற்றிற்கிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துவதால் இது யுகம் என அழைக்கப்படுகிறது.

யுகம் என்பது "யுக்" எனும் வார்த்தையிலிருந்து உருவானது "யுக்" என்றால் ஒருங்கிணைதல் என்று பொருள். யுகாதி என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். இங்கு யுக அல்லது ஒருங்கிணைப்பு என்பது பூமத்தியரேகை சூரியன்,சந்திரன்,மற்றும் சித்திரை ஆகியவற்றிற்கிடையே நிகழ்கிறது.
ஆகவே சந்திரமனம் முறைப்படி இக்காலம் யுகாதி எனப்படுகிறது.

சௌரமன முறையில் சூரியனின் சுழற்சி அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சூரியன் நில நடுக்கோட்டுக்கு நேராக இருக்கும் நாள் சம ராத்திரி நாளாகும். இந்த நாளுக்கு அடுத்து சூரியன் பூமியின் வடபகுதியை நோக்கி நகரத்தொடங்கும்

இந்தப் புள்ளியே சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியைப் பயன்படுத்துவோர் வருடப் பிறப்பாகக் குறிக்கும் புள்ளி ஆகும்.

பூமத்தியக்கோட்டை குறிக்கும் பழைய இந்திய பெயர் விஷ்வத்ருட்டரேகா (Visvadrutta Reha) அதன் பொருள் உலகை இரு சமபாகமாகப் பிரிப்பது என்பது ஆகும். எனவே விசு என்பதன் பொருள் சரிபாதி, இதன் அடிப்படையில் கொண்டாடப்படும் புத்தான்டு நாள் விசு எனப்படுகிறது.

சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து இவ்வாறுதான் காலம் கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது சமநாள் என்பது நாம் புத்தாண்டு கொண்டாடும் ஏப்ரல் மத்தியிலிருந்து மார்ச் இறுதிக்கு முன்னேறிவிட்டது.
பூமி தனது அச்சில் சாய்வாக சுழலும் விதமே இதற்குக் காரணமாகும். இதை சரி செய்ய 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் சரிசெய்யப்பட வேண்டும். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் வரை அதாவது வராகமிகிரரின் காலம்வரை இவ்வாறு முறையாக நாட்கள் சரிகட்டப்பட்டு வந்தன. அதன்பிறகு அதற்கு நாம் கவனம் கொடுக்காததால் இந்த வேறுபாடு ஏற்பட்டுவிட்டது.

விடுதலைக்குப்பின் தற்போது இக்குறைபாடு சரிசெய்யப்பட்டு இந்திய அரசின் ஆவணங்களில் மார்ச் 22 நமது புத்தாண்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

நமது பழம்பெருமையை உணர்ந்து அறிவியல்பூர்வமான இப்புத்தாண்டு முறையை நாம் அனைவரும் கொண்டாடுவோம்.


நன்றி : வாழும்கலை

22/04/2012

இராமன் எனும் திராவிடன் – சில குறிப்புகள்



இராவணன் ஒரு பிராமணன் என்று சொல்லும் வடமொழி நூல் தரவுகளை பல நூல்களிலும் இணையத்தில் கிடைக்கும் கட்டுரைகளிலும் காணலாம். அதேபோல் அனைத்து நூல்களும் இணையக் கட்டுரைகளும் இராமனை ஆரியன் என்றே சொல்லும். ஆரியன், திராவிடன் என்ற சொற்கள் அக்காலத்தில் இனத்தைக் குறிக்கப் பயன்பட்டதா என்பது கேள்விக்குரியது; ஆரிய திராவிட இனவாதம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த மேற்கத்திய இனவாதத்தின் அடிப்படையில் தோன்றிய வாதம் என்று நினைப்பதற்கும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதனைப் பற்றி வேறொரு நாள் பேசலாம். இந்தக் கட்டுரையில் அந்த வாதத்தை எடுக்கவில்லை.இராமனை ஆரியன் என்றே அனைத்து நூல்களும் சொல்ல, அப்படியே அனைத்து மக்களும் நினைத்துக் கொண்டிருக்க அவனுடைய முன்னோர்களில் ஒருவன் திராவிட அரசன் என்று கூறும் தரவுகளும் இருக்கின்றன என்று காட்ட எழுதப்படும் கட்டுரை இது.

அதற்குள் செல்வதற்கு முன்னர் ஒரு சிறிய முன்னுரை.இராமாயணத்தைப் பொறுத்தவரையில் மக்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1. இராமாயணம் போன்ற புராண இதிகாசங்கள் முழுக்க முழுக்க கற்பனைக் கதைகள் என்று சொல்பவர்கள் முதல் வகை. இவர்களுக்கு இராமன், இராவணன் போன்றவர்கள் எல்லாம் கற்பனைக் கதையில் வரும் கதை மாந்தர்கள் மட்டுமே. இராமனை மட்டும் கற்பனை என்று கூறிவிட்டு இராவணன் உண்மையில் வாழ்ந்த திராவிட மன்னன் என்று இவர்கள் கூற மாட்டார்கள்;கூறவும் கூடாது.இந்த வகையினருக்காக இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை.

2. இராமாயணம் போன்ற புராண இதிகாசங்கள் முழுக்க முழுக்க உண்மையானவை என்று எண்ணுபவர்கள் இரண்டாம் வகை. இவர்களுக்காக இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.


3. இராமாயணம் போன்ற புராண இதிகாசங்கள் உண்மையில் நடந்தவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டவை; பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தவை என்பதால் பல பகுதிகள் பொய்யோ என்று ஐயுறும் வகையில் திரிந்துவிட்டன; ஆனாலும் இவையெல்லாம் முழுக்க முழுக்க பொய் என்று கூற இயலாது என்று எண்ணுபவர்கள் மூன்றாவது வகையினர். இவ்வகையினருக்காக இக்கட்டுரை எழுதப்படுகிறது.

நீங்கள் எந்த வகை? 

இராமன் இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவன் என்பது இராமாயணம் சொல்லும் செய்தி. அதாவதுஇக்ஷ்வாகுஎன்பவன் இராமனின் முன்னோர்களில் ஒருவன். இவன் ஒரு புகழ் பெற்ற அரசனாக இருந்ததால் இவனுடைய வம்சமே இக்ஷ்வாகு வம்சம் என்று புகழ் பெற்றது. இவனுடைய தந்தையின் பெயராக புராணங்கள் சொல்வதுவைவஸ்வத மனு. வைவஸ்வத மனுவின் இன்னொரு பெயர் சத்தியவிரதன். இவனை திராவிட அரசன் என்றே பாகவதம், விஷ்ணு புராணம் முதலிய பல புராண நூல்களும் கூறுகின்றன. தரவாக ஒரே ஒரு எடுத்துக்காட்டை இங்கே காணலாம்.


யசௌ சத்யவ்ரதோ நாம ராஜரிஷிர் த்ராவிடேஸ்வர:
ஞானம் யோதீத கல்பாந்தே லபே புருஷ சேவயா
ஸ வை விவஸ்வத: புத்ரோ மனுர் ஆஸீத் இதி ச்ருதம்
த்வத்தஸ் தஸ்ய சுதா: ப்ரோக்தா இக்ஷ்வாகு ப்ரமுகா ந்ருபா:

பாகவதம் 9.1.2 & 9.1.3


இதன் பொருள்: யார் சத்தியவிரதன் என்ற பெயருடையவனோ இராஜரிஷியான அந்த திராவிட அரசன், இறைவனைத் துதித்ததால் சென்ற கல்பத்தின் இறுதியில் ஞானத்தை அடைந்தான். அவன் விவஸ்வான் என்னும் பகலவனின் மகன் என்பதையும் அவனே வைவஸ்வத மனு என்பதையும் ஏற்கனவே கேட்டிருக்கிறோம். இக்ஷ்வாகு முதலிய அரசர்கள் அவனுடைய மகன்கள் என்பதையும் கேட்டிருக்கிறோம்.

ஆக திராவிட அரசனான சத்தியவிரதன் என்னும் வைவஸ்வத மனுவின் மகன் இக்ஷ்வாகு. அவனுடைய குலத்தில் பிறந்தவன் இராமன். அப்படியென்றால் இராமனும் ஒரு திராவிடன்என்று கூற என்ன தடை இருக்கிறது?இதனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அவ்வாரானால் ஆரிய,திராவிட இனக் கொள்கை தவறா?
இராமனை ஆரியஇனத்தான் என திட்டிய புத்திசாலிகளின் வசவு தவறா?

(கூடலிடம்சுட்டு திருத்தப்பட்டது)