10/07/2012

ஹிந்துகுஷ் - பெயர்தரும் பாடம்


இந்தபடத்தில் நாம் காணும் அழகிய நடனம் ஐரோப்பாவின் செக் குடியரசின் தலைநகரான ஃப்ராக் கில் ஜிப்சிகள் எனப்படும் நாடோடிக்கூட்டத்தினரால் நிகழ்த்தப்பட்டதாகும். இம்மக்கள் ஐரோப்பா முழுவதும் பரவி உள்ளனர். இவர்களை இவர்கள் தங்கி இருக்கும் நாடுகள் பெரும் தொல்லையாகக் கருதுகின்றன.இவர்கள் அங்கெல்லாம் சம உரிமையுடன் நடத்தப்படுவதில்லை. கடந்த நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த இன ஒழிப்புக் கொடுமைகளால் மிகவும் பாதிக்கப்பட்ட இனம் இந்த ஜிப்சிகளாவர். இவர்கள் அங்கு ரோமானிகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தாங்கள் வாழும் நாட்டைப்பொருத்து வேறுபட்ட மொழிகளைப் பேசுகின்றனர்.


இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் ஜெர்மனியைத்தூய்மைப்படுத்தும் நோக்கில் ஹிட்லரால் ஏராளமாகப் படுகொலைசெயப்பட்ட ஏதுமறியா அப்பாவி மக்கள் கூட்டம் இந்த ரோமானிகள் கூட்டமாகும். இன்றும் ஐரோப்பாவில் இவர்கள் வெறுப்புணர்வுடனேயே பார்க்கப்படுகிறார்கள்.

இங்கு ஆசியாவில், ஹிந்துகுஷ் மலைத்தொடர் என்பது 1000 மைல் நீளமும் 200 மைல் அகலமும் கொண்ட மலைத்தொடராகும், இம்மலைத்தொடர் மத்திய ஆசியாவின் அமுதார்ய நதிப்பள்ளத்தாக்கையும், சிந்து நதி பள்ளத்தாக்கையும் பிரிக்கும் விதமாக அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் இமயமலைத்தொடரின் உப தொடராகும். இம்மலைத்தொடரானது 23000 அடிக்கும் கூடுதலான உயரம்கொண்ட 12 க்கும் மேற்பட்ட பனிமூடிய சிகரங்களைக்கொண்டதாக உள்ளது. இதன் பெரும்பகுதி ஆப்கானிந்தானிலும் பாகிஸ்தானிலும் அமைந்துள்ளது. இம்மலையின் சரிவுகள் தாவரங்கள் வளர்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிறாததால் அவை பசுமை ஏதுமின்றி வறண்டு காணப்படுகின்றன.


கைபர் கணவாய் இம்மலையில்தான் அமைந்துள்ளது. இந்திய சமவெளிக்குள் நுழைவதற்கான நுழைவாயில்போல் அமைந்துள்ளது. மற்ற எந்த வழியைவிடவும் பஞ்சாப்பிற்குள் நுழைய இது மிகவும் எளிய வழியாகும். போர் முக்கியத்துவம் வாய்ந்த இப்பாதை வழியாகத்தான் அலெக்சாண்டர் முதல் (327 BC), தைமூர் (1398 AD), முஹம்மது கஜினி (1001 AD), நாதிர்ஷா (1739 AD) என அனைத்துப்படையெடுப்பாளர்களும் நமது நாட்டைத்தாக்கினார்கள். இம்மலைக்கு நமது முன்னோர்கள் வைத்த பழையபெயர் "பாரியாத்ர பர்வதம்" என்பதாகும்


ஹிந்துகுஷ் பகுதி பழங்காலத்தில் (1000 AD) வரை வாஹிக் பிரதேஷ் மற்றும் காந்தாரதேசத்தில் இருந்தது. காந்தார தேசத்தின் எல்லை இந்த ஹிந்துகுஷ் மலையையும் தாண்டி பரவி இருந்தது. இந்த காந்தாரதேசமானது அயோத்தியை ஆண்ட பரத சக்ரவர்தியின் பேரனான தக்ஷன் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. இந்நாடு தக்ஷசீலத்திலிருந்து இன்றைய உஸ்பெக்கிஸ்த்தானின் தக்ஷகண்ட் (தாஷ்கண்ட்) வரை பரவியிருந்தது. மஹாபாரத இதிஹாசத்தில்வரும் காந்தாரியும், அவர் சகோதரர் சகுனியும் இந்நாட்டு அரசகுடும்பத்தினராவர்.

அதன்பிறகு சந்த்ரகுப்தமௌரியராலும் மௌரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் சில கிரேக்கஇன ஆட்சியாளர்களாலும் ஆளப்பட்டது. அவர்களில் சிலர் பௌத்தர்களாகவும் சிலர் வைஷ்ணவர்களாகவும் இருந்தனர். பேக்டிரியாபகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் அவற்றை உறுதிசெய்கின்றன.


அதன்பின் ஆண்ட கனிஷ்க்கரது காலத்திலும் பிறகு அப்பகுதியை ஆண்ட ஷாஹியா வம்ச மன்னர்களின் ஆட்சியின்போதும் இப்பகுதி ஹிந்துக்களும் பௌத்தர்களும் வாழும் பகுதியாக சீருடனும் சிறப்புடனும் இருந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்த்தான் மீதான முஸ்லிம் படையெடுப்பு 642 AD வாக்கில் தொடங்கியது. பலமுறை முஸ்லிம்களால் அரசுகளும் நகரங்களும் தாக்கி கைப்பற்றப்பட்டபோதும் அவர்கள் மீண்டும் மீண்டும் புரட்சிசெய்து தமது மதத்தையும் நாடு நகரங்களையும் மீட்டபடியே இருந்தனர்.1000AD வரை இப்பகுதி ஹிந்துமதத் தொட்டிலாக இருந்தது. 


இப்பொழுது ஆப்கானிஸ்தானம் ஒரு முஸ்லிம் தேசம். அவ்வாறானால் ஆப்கானிஸ்த்தானின் உண்மையான குடிமக்களுக்கு என்ன ஆகியிருக்கும்? அவர்கள் அனைவரும் என்ன காரணத்தினால் முஸ்லிம்களாக மாறினர்? கீழே நாம் காண்பவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்கள்தான் இன்னிலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.


  1. ஹிந்துகுஷ் பகுதியின் பூர்வகுடிகள் அனைவரும் இஸ்லாமுக்கு மாற்றப்பட்டிருக்கவேண்டும் அல்லது
  2. அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு அவர்தம்நாடு ஆக்கிரமிப்பாளர்களால் சொந்தமாக்கிக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் அல்லது
  3. அவர்கள் தமது சொந்த மன்னிலிருந்து துரத்தப்பட்டிருக்கவேண்டும்.


கி.பி 8 ஆம் நூற்றாண்டுமுதல் 11 ஆம் நூற்றாண்டுவரை ஹிந்துகுஷ் மலைப்பகுதி மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் தமது ஆக்கிரமிப்பு முயற்சிக்கும் மதமாற்ற முயற்சிக்கும் அப்பகுதிகளின் பூர்வகுடிகளாகிய ஹிந்துக்களிடமிருந்து விடாப்பிடியான எதிர்ப்பை சந்தித்தனர். இவ்வெதிர்ப்பை பல வரலாற்று பதிவுகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. 

ஆகவே அவர்கள் மதமாற்றத்துக்கு இறையாகி இருக்க முடியாது.

வேறென்ன நடந்திருக்கும்?

ஹிந்துகுஷ் எனும் பெயரே அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக்கூறப் போதுமானதாகும்.

ஆம் நானும்கூட ஹிந்துகுஷ் எனும் பெயரைப் படிக்கும்போது அது இந்துக்களின் நினைவாக உள்ள பெருமைப்படத்தக்க பெயர் என்று எண்ணியதுண்டு, ஆனால் விவரம் தெரிந்தபிறகு.....அடக் கடவுளே!

ஹிந்துகுஷ் என்றால்- ஹிந்து கொலைகளம். அல்லது ஹிந்து கொல்லி. ஆம் இதுதான் பாரசிகமொழியில் ஹிந்துகுஷ் என்பதன் பொருள்.

அம்மலைப்பகுதியிலும், ஆப்கானிஸ்தானிலும் வாழ்ந்த பூர்வகுடிகளான இந்துக்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஹொன்டமிர் எனும் முஸ்லிம் வரலாற்றாசிரியர் ஆப்கானிஸ்த்தானில் 15,00,000 இந்துக்கள் கொடுமைப்படுத்தப்பட்டதை பதிவுசெய்துள்ளார். 

அதுமட்டுமல்ல பலமுறை இந்தியாமீது படையெடுத்துவந்த இக்கொலைகாரர்கள் கொல்லப்பட்டதுபோக மீதமிருந்தவர்களை அடிமைகளாக்கி இம்மலைவழியே கொண்டு சென்றனர். அந்தமாதிரியான சமயங்களில் இம்மலையின் கொடுங்குளிர் தாங்காமல் லட்சக்கணக்கான அப்பாவி ஹிந்துக்கள் உயிரை விட்டனர். எஞ்சியவர்கள் அடிமைகளாக வாழவேண்டியதாயிற்று. 

இவ்வாறு முஸ்லிம்களால் அடிமைகளாக்கப்பட்ட மக்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் எல்லாம் எங்கே?

இதற்கானபதில் 1993ம் வருடத்திய நியூயார்க் டைம் பத்திரிகையில் கொடுக்கப்பட்டுள்ளது (மே-ஜூன்). 

ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் உள்ள அனைத்துநாடுகளிலும் யாருமற்ற அனாதைகளாக நாடோடிகளாக சுற்றிக்கொண்டிருக்கும், ஹிட்லரால் விஷவாயுசெலுத்திக் கொல்லப்பட்ட 3,00,000 பேர்களை இழந்த மக்கல் கூட்டமான ஜிப்சிகள்தான் அவர்கள். ஐரொப்பாவில் சுற்றிக்கொண்டிருக்கும் அவர்களது மொழி ஐரோப்பிய மொழி குடும்பம் அல்ல. அது பஞ்சாபி மொழியை ஒத்த சமஸ்கிருத வார்த்தைகளையும் கொண்டிருக்கும் இந்திய மொழிக்குடும்பத்தைச்சார்ந்தது. ஜிப்சிகள் நாடோடிகளாக அலையத்தொடங்கியகாலம் முஸ்லிம்கள் நாடுபிடிக்கக் கிளம்பிய காலகட்டத்துடன் சரியாக ஒத்துப்போகிறது.

இதுதான் ஹிந்துகுஷ் மலைக்கும் ஜிப்சிகளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு. 

சொந்தமன்னிலிருந்து விரட்டப்பட்டஹிந்துக்களும் அடிமையாக்கப்பட்டு தப்பிப்பிழைத்த ஹிந்துக்களும் எங்கெங்கோ நாடோடிகளாக அலைந்து கண்டவரிடமெல்லாம் உதைபடுகின்றனர்.

நடந்த படுகொலைகளையும், முஸ்லிம் வெறியர்கள் நடத்திக்கொண்டிருக்கும் படுகொலைகளையும், வருங்காலத்தில் ஹிந்துக்களாகிய நமக்கு வரக்கூடிய ஆபத்தையும் தொடர்ந்து உணர்த்தும்விதமாக ஹிந்துகுஷ் தொடர்ந்து அவ்வாறே  இருக்கிறது.



இங்குநாம் வரலாற்றை மறந்துவிட்டோம், அதுகற்றுத்தந்த பாடத்தை மறந்துவிட்டோம். அன்றுபோலவே இன்றும் பிரிந்துகிடக்கின்றோம். ஆனால் முஸ்லிம் வெறியர்கள் அதேவெறியுடனும் பேராசையுடனும் குரூரத்துடனும் இன்னும் நம்மைத் தாக்கிக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு நாம் என்னசாதி?, நமது மொழி என்ன? நாம் ஆரியானா? திராவிடனா? எதுவும் தேவை இல்லை.

அவர்களுக்குத்தேவை அடிமைகளாக நாம். ஆக்கிரமிக்க நமது மண்.

இங்கு எனக்கு நினைவுக்குவரும் பாடல்வரிகள் 

"விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்"

சகோதரர்களே நிலைமை மீண்டுமொருமுறை கைமீறும்முன் விழித்துக்கொள்ளுவோம். நமது வாரிசுகளாவது ஜிப்சிகளாகாமல் வாழட்டும்.

No comments:

Post a Comment